சினி அப்டேட்ஸ்

இருங்க பாய்.. கோர்ட் வாசலில் தயாரிப்பாளர் சங்கம்.. ரிவீவ்களுக்கு நீதிமன்றம் தடாலடி பதில்!

ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.

சென்னை: தமிழ் சினிமா என்பது சுதந்திரத்துக்கு முன்பில் இருந்தே மிகவும் பெரிதாக பேசப்பட்ட ஒன்று. காரணம், ஆங்கிலேய ஆட்சி, வரி, கிஸ்தி என பல இருந்தும், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றின் பரிணாமமாக சினிமாவை வளர்த்தெடுத்ததில் தமிழர்களுக்கு அலாதியான பங்கு உண்டு.

அப்படிப்பட்ட தமிழ் சினிமா, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், கதை, வசனம், நடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றால் அடுத்தடுத்து பயணித்து வருகிறது. அதேநேரம், சினிமா வணிகமும் ஆயிரங்களில் இருந்து தற்போது கோடிக்கணக்கில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்றார்போல் சினிமாக் கலைஞர்களின் ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பும் ரசிகர்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

அப்படி, தமிழ் சினிமாவில் உள்ள உச்சபட்ச நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை, ஒவ்வொருவரும் தங்களுக்காக சினிமா வணிகத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா என்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களின் பெயர்களோடு வெளியாகின.

ஆனால், இவை அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவில்லை. அதற்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய சினிமாக்களைக் கொண்டாட தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இருந்தாலும், திரை விமர்சனம் என்ற மற்றொருபுறம் குற்றச்சாட்டு அடுக்கி வைக்கப்படுகிறது.

காரணம், படம் வெளியான நாளின் முதல் காட்சியில் இடைவேளையில் வெளியில் வருபவர்களிடமே சமூக வலைத்தள ஊடகங்கள் மைக்கை நீட்டுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இவர்களின் எதிர்மறை விமர்சனங்கள், இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக மக்களைச் சென்றடைவதால் தமிழ் சினிமா வணிகத்தில் சற்று சறுக்கலையேச் சந்தித்து வருகிறது எனலாம்.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், ஒரு திரைப்படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு எந்தவித திரை விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!

ஆனால், இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையின்போது, படம் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

8 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

8 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.