அமரன் திரைப்படம் பெரும் சவால்களுக்கு இடையே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை சிக்கலைச் சந்தித்த தமிழ் படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். இப்படம் இதுவரை உலக அளவில் 100 கோடியைத் தாண்டி வசூலை எட்டி வருகிறது. அதேநேரம், இதில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக தமிழகத்தில் பல அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பினையை தெரிவித்திருக்கின்ற.
இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக சிக்கலைச் சந்திக்காவிட்டாலும், தற்போது மாபெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது என்று கூறலாம். ஆனால், ரிலீஸ் ஆவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து உள்ளன. அந்த வகையில், விக்ரம் நடிப்பில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெளியான துருவ நட்சத்திரம் பொருளாதார சிக்கலால் தவித்தது.
தயாரிப்பாளரின் நிதிப் பிரச்னை காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவதில் தள்ளிப்போனது. இருப்பினும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தோல்வியையேச் சந்தித்தது. அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம், முதல் முறையாக சிக்கலைச் சந்தித்தது. இதனுடன் சிறுத்தை மற்றும் ஆடுகளம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் களமிறங்கின.
ஆனால், காவலன் படத்திற்கு முன்னதாக விஜயின் பாக்ஸ் ஆபிஸ் மிகவும் மோசமாக இருந்ததாக விநியோகஸ்தர்கள் கருதி, அதனை திரையரங்குகளில் வெளியிட மறுத்தனர். இதனால் பெரும் சிக்கல்கள் நிலவி வந்தன. அதன் பிறகு படம் வெளியானது. இதேபோல், விஸ்வரூபம் திரைப்படமும் அமரன் திரைப்படத்தைப் போன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. இஸ்லாமியர்களை மத ரீதியாக தவறாக சித்தரிப்பதாகவும், பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இருப்பினும், இப்படம் வெளியாகி கமல்ஹாசனின் தொழில்நுட்ப திரைப்படத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது எனலாம். இந்த வரிசையில், கத்தி திரைப்படம் ஆளும் திமுக அரசு முதல் பாஜக அரசு வரை பல்வேறு எதிர்வினைகளை சந்தித்தது. அதிலும் குறிப்பாக, மெர்சல் திரைப்படம் பாஜகவுக்கு எதிரான வார்த்தைகளைக் கொண்டதாக எதிர்ப்புகளை கிளப்பியது.
இதையும் படிங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?
இருப்பினும் இவை இரண்டுமே படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு சவாலைச் சந்தித்தது என்று கூறலாம். மிக முக்கியமாக இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, தமிழ் சினிமாவில் அரசியல் மற்றும் மத ரீதியாக குறிப்பிடுவது என்பது தற்போது பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்து வருவது எனலாம். முன்னதாக, சாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே வைத்து படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதனை நடுநிலையோடு கொண்டாடிய மக்கள், தற்போது சாதி ரீதியான படங்களை அதற்கான எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.