லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு. தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,
விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தில் சினேகா ரோலில் முன்னதாக நடிக்க இருந்தது நடிகை நயன்தாரா தான். ஆனால், சினேகா ரோலில் முதன் முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை நடிகை ஜோதிகா தானாம். ஆனால், ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க சூர்யா தரப்பு சம்மதம் தெரிவிக்காதால் ஜோதிகா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகு இந்த படத்தின் கதை நயன்தாராவிடம் சென்று இருக்கிறது. ஆனால் நயன்தாராவும் கோட் படத்தின் கதையை பொறுமையாக கேட்டுவிட்டு தான் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்: 100% உண்மையாக இருந்தேன் – குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை – சமந்தா கறார்!
காரணம் முன்னாள் காதலரான பிரபுதேவா இத்திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா அவருடன் ஆன சில காட்சிகளும் தனக்கு இருக்கும் என்பதை அறிந்து கொண்டு அவருடன் நடிப்பது சரிவராது என முடிவு செய்த அந்த படத்தில் நடிக்கவே மறுத்து விட்டாராம்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் இந்த முடிவு மிகச் சரியானதே. என்ன தான் எக்ஸ் காதலனாக இருந்தாலும் அவருடன் சேர்ந்து நடிக்க கூட நயன்தாரா மறுத்துள்ள இந்த எண்ணம் உயர்ந்த எண்ணமாக பார்க்கப்படுகிறது என கூறியுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.