தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் டிஜே ஞானவேல். இவர் தமிழ் திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். சென்னையில் லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் சினிமாவில் வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்து இருக்கிறார் .
ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தில். எழுத்தாளராக இவரது வாழ்க்கை ஆரம்பித்தது. 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து பயணம்,தோனி, உன் சமையலறையில் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார். இதை அடுத்து 2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருத்தன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் .
இந்த திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை அடுத்து சூர்யாவை வைத்து ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இயக்குனர் ஞானவேல். இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளமாகவும் மிகப்பெரிய வெற்றியையும் தேடி தந்தது.
அதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்து சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையின் திரைப்படத்தில் சூர்யாவுக்கு தேங்க்ஸ் கார்ட் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
ஜெய் பீம் படத்தில் சூர்யா சார் நடித்ததால் தான் இன்னைக்கு உலகம் முழுக்க ஒரு கணிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு உருவானது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா சாருக்கு ஒரு படம் பண்றதுக்காக நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அந்த டைம்ல எனக்கு வேட்டையன் வாய்ப்பு வரும்போது இது உங்களுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய நல்ல வாய்ப்பு மீண்டும் கூட நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படம் பண்ண முடியும்.
இதையும் படியுங்கள்:பாவிங்க… 55 நாள் நைட்டு பகலா என்ன வச்சு செஞ்சாங்க…. நடிகை பிரியா பவானி ஷங்கர் வேதனை!
ஆனால், இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. சூப்பர் ஸ்டாரை வச்சு படம் இயக்கி வெற்றி கண்டுட்டு வாங்க என வாழ்த்தி அனுப்பினார். அதை என்னால் மறக்க முடியாது. சூர்யா சாராள் நான் இன்று உச்சத்தில் வளர்ந்திருக்கிறேன் என எனக்கு ஞானவேல் மிகுந்த நிகழ்ச்சியோடு பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.