தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் டிஜே ஞானவேல். இவர் தமிழ் திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். சென்னையில் லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் சினிமாவில் வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்து இருக்கிறார் .
ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தில். எழுத்தாளராக இவரது வாழ்க்கை ஆரம்பித்தது. 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து பயணம்,தோனி, உன் சமையலறையில் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார். இதை அடுத்து 2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருத்தன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் .
இந்த திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை அடுத்து சூர்யாவை வைத்து ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இயக்குனர் ஞானவேல். இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளமாகவும் மிகப்பெரிய வெற்றியையும் தேடி தந்தது.
அதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்து சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையின் திரைப்படத்தில் சூர்யாவுக்கு தேங்க்ஸ் கார்ட் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
ஜெய் பீம் படத்தில் சூர்யா சார் நடித்ததால் தான் இன்னைக்கு உலகம் முழுக்க ஒரு கணிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு உருவானது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா சாருக்கு ஒரு படம் பண்றதுக்காக நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அந்த டைம்ல எனக்கு வேட்டையன் வாய்ப்பு வரும்போது இது உங்களுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய நல்ல வாய்ப்பு மீண்டும் கூட நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படம் பண்ண முடியும்.
இதையும் படியுங்கள்:பாவிங்க… 55 நாள் நைட்டு பகலா என்ன வச்சு செஞ்சாங்க…. நடிகை பிரியா பவானி ஷங்கர் வேதனை!
ஆனால், இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. சூப்பர் ஸ்டாரை வச்சு படம் இயக்கி வெற்றி கண்டுட்டு வாங்க என வாழ்த்தி அனுப்பினார். அதை என்னால் மறக்க முடியாது. சூர்யா சாராள் நான் இன்று உச்சத்தில் வளர்ந்திருக்கிறேன் என எனக்கு ஞானவேல் மிகுந்த நிகழ்ச்சியோடு பேசினார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.