ரசிகர்களுக்கு நாம் கொடுக்க மட்டுமே வேண்டும், படைப்பாளியை விட ரசிகர்களுக்கு அதிக அறிவு இருக்கிறது என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.
சென்னை: திரைப்பட இயக்குநர் பாலா, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் பேசிய அவர், “பாலுமகேந்திரா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று இதுதான். ஒருவன் பசி என்று கூறினால், அவனுக்கு வாழைப்பழத்தைக் கொடு, அவனால் உரித்து திங்க முடியாத நிலையில் இருக்கிறானா?
அப்படியென்றால், வாழைப்பழத்தை உரித்து கொடு, அதை விட்டுவிட்டு வாழைப்பழத்தை ஏன் ஊட்டி விடுகிறாய்? அது அவனுடைய வேலை. அதற்கான அவசயமும் அங்கு இல்லை. அவனுக்கென்று அறிவு இருக்கிறது. எனவே, அவன் அதனைச் செய்து கொள்வான்.
நீ (பாலா) 10 படங்களோ, 15 படங்களோ எடுக்கிறாய், ஆனால், ரசிகனான அவன் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்க்கிறான். எனவே, உன்னை விட அவனுக்கு தான் அறிவு அதிகம். படம் எடுக்கும் இயக்குநர்களை விட, ரசிகர்களே மிகச் சிறந்த படைப்பாளி.
நூறு படம் பார்க்கும் அவன் மிகவும் எளிதாக எங்கு தவறுகள் உள்ளது எனக் கண்டுபிடித்து விடுவான். எனவே, ரசிகர்களை அவ்வளவு எளிதாக நாம் ஏமாற்றிவிட முடியாது. நீ (இயக்குநர்கள்) சொல், நான் (ரசிகர்கள்) புரிந்துகொள்வேன் என்பதே நியதி. அதேநேரம், ரசிகர்களுக்கு கிளாஸ் எடுக்கவும் முடியாது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தின பதக்கம் பெற்ற காவலர் குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!
பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாக இருக்கிறது. முன்னதாக, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அது இருவர் ஒத்துழைப்போடே நடைபெற்றது என்றும் சமீபத்தில் பாலா விளக்கம் அளித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.