பிரபல நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். திரைத்துறையை சாராத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா.
ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேற்கேற்றி இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து தொடர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்ததால் அங்கும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தா பார்க்கப் பட்டார்.
அந்த அளவுக்கு இவரது வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து வந்த நடிகை சமந்தா 8 ஆண்டு காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.
இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமத்தா தன்னுடைய கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். தற்போது வருண் தவான் உடன் சிட்டாடல் என்ற தொடரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்கள்.
சமந்தாவை கட்டி அணைத்தபடி அவரை தன மடிமீது அமர வைத்து எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வருண் தவான் வெளியிட அதற்கு சமந்தாவும் கமெண்ட்ஸ் செய்திருக்கிறார் .
இந்த புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சமந்தாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து இந்த போட்டோவை பார்த்தால் நாக மூளையில் உட்கார்ந்து அழப் போகிறார் என கமெண்ட் செய்து கலாய்த்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.