குடும்பத்தை மீடியா பக்கமே காட்டாமல் இருந்த கவுண்டமணி.. சீக்ரெட்டை வெளியிட்ட பிரபலம்..!

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள். தற்போது, எத்தனையோ காமெடி நடிகர்கள் பல காமெடிகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் காட்சியில் வரும் காமெடிகள் எப்போதும் மன மக்கள் மனதில் நிற்கும்.

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வாய்மை என்னும் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் எந்த ஒரு படத்திலும் கவுண்டமணி நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை கவுண்டமணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். நடிகர் கவுண்டமணி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலானது.

கவுண்டமணிக்கு சுமித்ரா, செல்வி என இருமகள்கள் உள்ளனர். தற்போது சுமித்ரா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கவுண்டமணியின் மகள் சுமித்ரா கடந்த சில ஆண்டுகளாகவே பொது சேவை செய்து வருகிறாராம். அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் இவர் தனது கணவருடன் இணைந்து சேவை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

கவுண்டமணியை பொறுத்தவரையில், பொதுவாக அவரது குடும்பம் பற்றிய எந்த தகவலும் பெரிதாக யாரும் தெரிந்து கொள்வதை அவர் விரும்ப மாட்டாராம். அவரைப் பொறுத்த வரையில் திரையில் இருக்கும் கவுண்டமணியை மக்கள் தெரிந்து கொண்டால் போதும் அசல் கவுண்டமணியை தெரிந்து வைத்திருக்கும் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கொள்கையில் இருப்பவராம். முக்கியமாக மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைப்பவர். இதனாலேயே கவுண்டமணி தனது குடும்பத்தை மீடியா பக்கம் காட்டாமல் இருந்து வந்துள்ளார் என்று பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

51 minutes ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

1 hour ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

3 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.