இந்த ரெசிபி டிரை பண்ணா நீங்க செய்யுற முட்டை குருமாவின் வாசனை தெருவெல்லாம் மணக்கும்!!!

முட்டை உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் உட்கொள்ளப்படும் ஆரோக்கியமான உணவாகும். முட்டைகள் அதிக சத்தானவை மற்றும் அவற்றை முழுவதுமாக உட்கொள்ளலாம். முட்டையை வைத்து குழம்பு வகைகள் மற்றும் முட்டை பொரியல், பொடிமாஸ் என பலவகை ரெசிபிகள் உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி முட்டை குருமா. இந்த ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை -4
எண்ணெய் -3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் நறுக்கியது-1
வரமிளகாய் -3
இஞ்சி -1தேக்கரண்டி
பூண்டு -2தேக்கரண்டி
உப்பு-சுவைக்கு ஏற்ப
தக்காளி -3(நறுக்கியது)
மல்லித்தூள் -1தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -3தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
முந்திரி -5
தேங்காய் -3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு
சோம்பு-11/2 தேக்கரண்டி
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பட்டை-2(துண்டு)
கிராம்பு -5
ஏலக்காய் -5
பிரியாணி இலை -1

அரைக்க:
அடுப்பில் வாணலியை வைத்து 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, வரமிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு தேங்காய், சோம்பு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
*பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

*வதக்கிய பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா விழுதுகள் உப்பு ஆகியவை சேர்ந்து நன்கு வதக்கவும்.

*வதக்கிய அனைத்தும் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் நான்கு முட்டைகளை கீறி சேர்க்கவும்.

*பின்பு மூடிப் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

மக்களை திசைதிருப்ப சூர்யா போட்ட பிளான்? பத்து கோடி கொடுத்ததுக்கு காரணம் இதுதானா?

அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…

12 minutes ago

போலி பான் கார்டு, ஆதார்… சிக்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் : சல்லடை போடும் போலீசார்!

கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…

1 hour ago

ரஜினியை அடிக்க முதல் ஆளாக கையை தூக்கிய நாசர்! இப்படி வாண்டடா வந்து வண்டில ஏறிட்டீங்களே!

ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…

2 hours ago

இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

2 hours ago

இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!

காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…

2 hours ago

கிறிஸ்தவ கூடாரத்தை அகற்ற வந்த வருவாய்த்துறை : ஒன்று கூடிய கிராம மக்களால் பதற்றம்!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…

4 hours ago

This website uses cookies.