சமையல் குறிப்புகள்

கிரிஸ்பி, ஹெல்தி சிறுதானிய தோசை ரெசிபி!!!

இன்றைய மாடர்ன் உலகில் பாரம்பரிய உணவுகள் பல நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் சிறு தானியங்களை பல்வேறு உணவுகளாக செய்து சாப்பிட்டு வந்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்தமாக நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் நாமோ ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என்று நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். வளர்ந்து வரும் நம்முடைய குழந்தைகளுக்காவது இனி ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க முயற்சி செய்வோம். அந்த வகையில் குதிரைவாலி அரிசியை வைத்து கிரிஸ்பியான அதே நேரத்தில் ஆரோக்கியமான தோசை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.  

செய்முறை 

1 1/2 கப் குதிரைவாலி அரிசியை 4 முதல் 5 முறை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கழுவி ஒரு மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஊறவைத்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனோடு 2 பச்சை மிளகாய், 2 இன்ச் அளவு இஞ்சி, ஒரு மணி நேரம் சுடு தண்ணீரில் ஊற வைத்த ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை, 6-7 ஊறவைத்து தோலுரித்த பாதாம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி தழை, ஒரு டீஸ்பூன் சீரகம், 3/4 டீஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நீர் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். 

இதையும் படிக்கலாமே: மூட்டு வலி பாடாய்படுத்துதா… உங்களுக்கான சிம்பிள் ஹோம் ரெமடீஸ்!!!

அதாவது ரவை தோசை சுடுவதற்கு மாவு கரைத்துக் கொள்ளும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 

இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் கரண்டியில் மாவு எடுத்து தோசையை ஊற்றவும்.

உங்களுக்கு பிடித்திருந்தால் தோசையை சுற்றி நெய் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வழக்கம் போல எண்ணெய் பயன்படுத்தவும்.

இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். 

நாம் தயார் செய்த மாவில் கிட்டத்தட்ட 15 தோசைகளை ஊற்றி எடுக்கலாம். இந்த மாவை 2 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.