பொதுவாக விசேஷம் என்றாலே நாம் பருப்பு பாயாசம் அல்லது சேமியா பாயாசம் செய்வது வழக்கம். ஆனால், சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால் நீங்கள் இளநீர் பாயாசம் செய்து அசத்தலாம். இதனை பத்தே நிமிடங்களில் சுலபமாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர் வழுக்கை – 3/4 கப்
இளநீர் தண்ணீர் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி, பாதாம், திராட்சை – சிறிது
செய்முறை:
*பாலைக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கெட்டியாக விடவும்.
*பாலை இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.
*இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீரை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
*நெய்யில் பாதாம், முந்திரி, திராட்சையை வதக்கிக் கொள்ளவும்.
*அரைத்து வைத்ததை பாலில் சேர்க்கவும்.
*அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய பாதாம், முந்திரி, திரட்சியை சேர்த்து சில்லென்று பருகவும்.
குறிப்பு:
பால் நன்றாக ஆரிய பின்னரே அதில் அரைத்து வைத்ததை சேர்க்க வேண்டும். பாலை பிரிட்ஜில் வைத்தும் சேர்க்கலாம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது எளிதில் கெட்டுப்போகும் என்பதால் அதே நாள் பருகுவது நல்லது.
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
This website uses cookies.