வீட்ல காய்கறி நிறைய மீந்துபோச்சா… அத வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி சாம்பார் பண்ணீடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2022, 7:15 pm
Quick Share

சாம்பாரில் பல வகை உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி கதம்ப சாம்பார். இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இப்போது கதம்ப சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் -1
கத்தரிக்காய் -3
மாங்காய் -1
பீன்ஸ் -4
கேரட் -1
அவரைக்காய் -3
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் -2
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
பூண்டு -3பல்
துவரம்பருப்பு -200(கிராம்)
மஞ்சள்தூள் -2சிட்டிகை
சாம்பார் தூள் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -1டீஸ்பூன்
உளுந்து -1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
வெந்தயம் -கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன்
புளிச்சாறு -2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

வேகவைக்க:
குக்கரில் துவரம்பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், சிறிதளவு சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், உளுந்து, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சாம்பார்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

செய்முறை:
*பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வேகவைத்த பொருட்களுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.

*பின்பு சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*காய்கறிகள் நான்றாக‌ வெந்தவுடன்.புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

*பின் தாளித்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 698

0

0