சமையல் குறிப்புகள்

மட்டன் கோலா உருண்டைக்கே டஃப் கொடுக்கும் சோயா சங்ஸ் கோலா உருண்டை!!!

கோலா உருண்டை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது மட்டன் கோலா உருண்டை தான். ஆனால் மட்டன் கோலா உருண்டைக்கே டஃப் கொடுக்கும் வகையில் சோயா சங்ஸில் கோலா உருண்டை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். இதனை வெறும் 15 நிமிடங்களில் செய்துவிடலாம். சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இப்போது சோயா சங்ஸ் கோலா உருண்டை ரெசிபியை பார்க்கலாம்.

சோயா சங்ஸ் கோலா உருண்டை செய்வதற்கு 1 1/2 கப் அளவு சோயா சங்ஸ் எடுத்து அதனை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 2 நிமிடங்கள் போட்டு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது ஒரு கடாயில் ஒரு கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, 2 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, 1/4 தேக்கரண்டி சோம்பு, 1/4 தேக்கரண்டி சீரகம், 2 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி மிளகு ஆகியவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் இதனோடு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் நாம் ஊற வைத்து எடுத்த சோயா சங்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து கடாயில் உள்ள பிற பொருட்களோடு சேர்த்து கிளறவும்.

பின்னர் இதற்கு தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கலவை வெதுவெதுப்பாக மாறியதும் மிக்ஸி ஜாரில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த கலவையோடு ஒரு கப் பொட்டுக்கடலை மாவு, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் இந்த உருண்டைகளை போட்டு பொறித்து எடுக்கவும். உருண்டைகளை எண்ணெயில் போட்ட உடனேயே கரண்டி வைத்து கிளறி விட வேண்டாம். 2 நிமிடங்கள் காத்திருந்த பிறகு திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா சங்ஸ் கோலா உருண்டை தயார்!!

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.