வாய்ப்புண்களை ஒரே நாளில் குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை சூப் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
14 May 2022, 1:47 pm
Quick Share

வயிற்று புண், வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி சூப் செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். மணத்தக்காளி உடல் சூட்டை தணிக்கும். மணத்தக்காளியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். மணத்தக்காளி சூப் மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி – 1( கட்டு)
பாசிப்பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பற்கள்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
சீரகம் – 1டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு, பூண்டு , சீரகம் அரை டீஸ்பூன் , தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

* அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

* பின்பு அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு ‌கொதிக்க விடவும்.

* அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு அந்த தாளிப்பை கீரையுடன் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும்.

* இப்போது சுவையான, கமகமக்கும் மணத்தக்காளி கீரை சூப் தயார்.

* இந்த மணத்தக்காளி சூப்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இதனுடன் வறுவல் அல்லது வத்தல் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Views: - 828

0

0