பொதுவாக டீ, காபி என்றாலே சோர்வினை போக்கி, புத்துணர்ச்சி தரக்கூடிய பானங்களாக கருதப்படுகிறது. அதிலும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மசாலா டீயானது உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைகிறது. மசாலா சாய் என்று வட இந்தியாவில் மிகவும் பிரபலமான அறியப்படும் இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
ஏலக்காய் – 6
பட்டை – 1 இன்ச்
இலவங்கம் – 4
இஞ்சி – 1 துண்டு
டீ தூள் – 2 தேக்கரண்டி சர்க்கரை – 2 தேக்கரண்டி
செய்முறை:
*முதலில் ஒரு இடி கல் அல்லது மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஏலக்காய், பட்டை மற்றும் இலவங்கம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*இஞ்சியை தட்டி தனியாக வைக்கவும்.
*இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
*தண்ணீர் கொதித்ததும் இரண்டு தேக்கரண்டி டீத்தூள் சேர்க்கவும்.
*பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் இடித்து வைத்த இஞ்சி ஆகியவை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
*டிக்காஷன் பாதியாக வரும் வரை கொதிக்க விடவும்.
*இதற்கு இடையில் இரண்டு கப் பாலை காய்ச்சவும்.
*பால் பொங்கியதும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
*டிகாஷன் தயாரானதும் பாலோடு சேர்த்து பின்னர் வடிகட்டவும்.
*அவ்வளவு தான்… நறுமணமான புத்துணர்ச்சி தரும் மசாலா டீ தயார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.