குளு குளு மழைக்கு சூப்பர் சுவையான பீட்ரூட் சூப்!!!

Author: Hemalatha Ramkumar
1 August 2022, 7:29 pm
Quick Share

வெளியே மழை பெய்யும் போது சூடான சூப்கள் சிறந்த தேர்வாகும். இன்று நாம் தயாரிக்க இருக்கும் சூப் சுவையானதாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான ஒன்றாகவும் இருக்கப் போகிறது. இப்போது பீட்ரூட், வால்நட் சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
2 தேக்கரண்டி எண்ணெய்
1 பிரியாணி இலை
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
3 முதல் 4 பல் பூண்டு, நறுக்கியது
1 பச்சை மிளகாய், நறுக்கியது
1/2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
1/2 கப் நறுக்கிய அக்ரூட் பருப்புகள்
1 பெரிய பீட்ரூட், நறுக்கியது
1 தேக்கரண்டி வினிகர்
2 கப் காய்கறி வேக வைத்த தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீர்
உப்பு மற்றும் மிளகு, தேவையான அளவு
1/4 கப் தேங்காய் பால்

செய்முறை:
* மிதமான தீயில் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, நறுக்கிய மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

* நறுக்கிய வால்நட்ஸ், நறுக்கிய பீட்ரூட், வினிகர், வெஜிடபிள் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் சமைக்கவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து நீக்கி, கலவையை குளிர்விக்கவும்.

*கலவை ஆறியதும் நன்றாக கலந்து விடவும்.
இதனை மீண்டும் கடாயில் மாற்றி, உப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறி விடவும்.

* தேங்காய்ப் பால் சேர்த்து, தொடர்ந்து கிளறி, சூப்பை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள்.

* சிறிது தேங்காய்ப்பால், நறுக்கிய அக்ரூட் பருப்புகள் மற்றும் உங்களுக்கு விருப்பமான மூலிகைகள் கலந்து அலங்கரித்து பரிமாறவும்.

Views: - 616

0

0