சமையல் குறிப்புகள்

கத்திரிக்காய் சாதம்: குழந்தைகளுக்கு இத கொடுத்தா கண்டிப்பா டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும்!!!

கத்திரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் சாதம் சுவையாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் கொடுப்பதற்கு இந்த டிஷ் அருமையானதாகவும், ஈசியாகவும் இருக்கும்.

கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு முதலில் நாம் தனியாக ஒரு மசாலா அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். இது லேசாக வறுபட்டதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் 5 வர மிளகாய் சேர்க்கவும். மசாலா பொருட்களில் இருந்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை குறைத்து விட்டு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எள் விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காயின் ஈரப்பதம் முழுவதுமாக போனவுடன் அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1/2 டேபிள்ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை நன்றாக வறுபட்டவுடன் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து பாதி அளவு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் ஒரு நிமிடம் வதங்கியவுடன் அதில் 6 கத்திரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசியவுடன் அவற்றை சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் நிறம் மாறி நன்றாக ரோஸ்டான பிறகு அதில் ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து அந்த புளி தண்ணியை சேர்த்துக் கொள்ளவும்.

இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் போல கொதிக்க வைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிக அளவில் சேர்த்து விட வேண்டாம். கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் நாம் தயார் செய்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். கலவை தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அதில் 3 கப் வேக வைத்த சாதம் மற்றும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். இந்த கத்திரிக்காய் சாதத்தை வெறும் அப்பளம் மற்றும் ஊறுகாய் இருந்தாலே ஜோராக சாப்பிட்டு முடித்து விடலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.