காரசாரமான செம டேஸ்டான சிக்கன் குழம்பு ரெசிபி!!!

சிக்கனை வைத்து பல ரெசிபிகள் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி சிக்கன் குழம்பு. ருசியான இந்த சிக்கன் குழம்பை சாதம், சப்பாத்தி, பூரி இட்லி, தோசை, போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாக தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். குழம்பு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக சிக்கன் குழம்பு உள்ளது. இதற்கு காரணம் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாவை குறிப்பிட்டு சொல்லலாம். ருசியான, காரசாரமான இந்த சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500(கிலோ)
வெங்காயம் – 3(பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மராத்தி மொக்கு – 1
அன்னாசி பூ – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
சிக்கன் குழம்பு மசாலா – 2 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் – 1(கப்)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மராத்தி மொக்கு, அன்னாசி பூ, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*வெங்காயம், தக்காளி பொன்னிறமாக வந்ததும். சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

*பின்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சிக்கன் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் தண்ணீர் ஒரு கப் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.

* பின்பு சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து வெந்தவுடன் அதில், அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

* பின்பு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* இப்போது சுவையான கமகமக்கும் சிக்கன் குழம்பு தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.