என்னதான் வகை வகையா சட்னி செய்து கொடுத்தாலும் இட்லிக்கு குருமா வச்சு கொடுத்தா அன்னைக்கு இட்லி குண்டான் சீக்கிரமா காலி ஆயிடும். இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் வித்தியாசமான ஃபிளேவரில் அருமையான ஒரு இட்லி குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் 11/2 டேபிள் ஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பு, 5 முதல் 6 பச்சை மிளகாய் சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் 4 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் சோம்பு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
இதையும் படிக்கலாமே: இந்த ரசப்பொடி வச்சு ரசம் செய்து பாருங்க… தெருவே மணக்கும்!!!
அடுத்து இதில் ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து இரண்டும் வறுப்பட்டவுடன் 1/2 கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் சேர்த்த பிறகு ஒரு நிமிடம் மட்டும் வதக்கினால் போதுமானது. இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு பெரிய சைஸ் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி ஒன்று சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி சாஃப்டாக வதங்கியவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்து 2 வேக வைத்த உருளைக்கிழங்கை உங்களுக்கு பிடித்தமான அளவில் நறுக்கி சேர்த்து வதக்கவும். இப்போது நாம் அரைத்து வைத்த டேஸ்ட்டை சேர்த்து 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிளறி கொள்ளவும்.
இந்த குருமாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி சூடான இட்லிக்கு இந்த குருமாவை பரிமாறுங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.