உங்க வீட்ல தயிர் மீந்து போய்டுச்சா… இந்த மாதிரி குழம்பு செய்து வீட்டாரை அசத்துங்க!!!

எளிமையான முறையில் அதுவும் சில நிமிடங்களில் செய்ய கூடிய குழம்பு வகைகளில் மோர் குழம்பும் ஒன்று. உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த மோர்‌குழம்பு‌ மற்ற சில பொருட்களுடன் சேரும் போது மிகுந்த ருசி பெறுகிறது. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பூசணிக்காய், வெண்டைக்காய், மிளகு சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள்.

இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது சிலர் மோர் குழம்பை திரித்து விடுவது உண்டு. முதல் முறையாக மோர் குழம்பு செய்பவர்கள் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் செய்து பார்த்தால் மோர் குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.

மோர் குழம்பு செய்வதற்கு முந்தைய நாளில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி பின்பு அதை ஆற விட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு தயிரை சேர்த்து அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் வைத்து விடவும். மறுநாள் நமக்கு தேவையான தயிர் வீட்டிலேயே தயார் ஆகிவிடும். அவசர காலகட்டங்களில் மோர் குழம்பை வைப்பதாக இருந்தால் தயிரை கடைகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.

இப்பொழுது கீழே மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்

தேவையான பொருட்கள்:
தயிர் – 1(கப்)
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி – 1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
வரமிளகாய் – 1
தேங்காய் – 1(கப்)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி , துவரம்பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, தேங்காய் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*தயிரை ஒரு மிக்ஸி‌ ஜாரில் ஊற்றி ஒரு சுத்து சுத்தி தனியாக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின்னர் இந்த அரைத்த ‌தயிரை நாம்‌ ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கடலைபருப்புடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

*இப்பொழுது ஒரு கடாயை‌ அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு வறுக்கவும்.

*பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பிறகு, அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் போர் கலவையை ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு‌ சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மூடி‌ போட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.

*ஐந்து நிமிடத்திற்கு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை‌ அனைத்து விட்டு. அதை‌ அடுப்பில் ‌இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும்.

*இப்போது, சுவையான போர் குழம்பு தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மூதாட்டியின் கழுத்தை அறுத்த பேரன்… கோவையை அலற விட்ட பகீர் சம்பவம்!

கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…

6 minutes ago

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

15 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

16 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

16 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

17 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

18 hours ago

This website uses cookies.