உணவு என்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நாம் என்ன தான் பார்த்து பார்த்து உணவுகளை கொடுத்தாலும், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அவை அனைத்தையும் சாப்பிட்டு விட மாட்டார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு உணவுகளை சமைப்பது மிகவும் முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அப்படியான ரெசிபி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். சத்துக்கள் நிறைந்த பொட்டுக்கடலை அல்வா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 4 தேக்கரண்டி முந்திரி பருப்பு – 6
செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் வெல்லம் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
*வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி தனியாக எடுத்து வையுங்கள்.
*பொட்டுக்கடலையை அரைத்து மாவாக்கி வைக்கவும்.
*அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொள்ளலாம்.
*இதே நெய்யில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
*மாவு வறுப்பட்டதும் வெல்லப் பாகு ஊற்றி கிளறவும்.
*இடை இடையே நெய் சேர்த்து கிளறவும்.
*கடாயில் ஒட்டாமல் அல்வா போல திரண்டு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பீஸ் போட்டு கொள்ளலாம்.
*அவ்வளவு தான்… அட்டகாசமான பொட்டுக்கடலை அல்வா தயார்.
*தசைகள், எலும்பு மற்றும் நரம்புகள் வலுப்பெற இது உதவும்.
*வெளியில் வைக்கும் போது இரண்டு நாட்களும், ஃபிரிட்ஜில் வைக்கும் போது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.