பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் மீந்துவிட்டதா… அதை வீணாக்காமல் ஊறுகாய் செய்து விடலாமே…!!!

Author: Hemalatha Ramkumar
17 January 2023, 7:34 pm
Quick Share

என்ன தான் பல விதமான தொட்டுக்கைகள் இருந்தாலும், ஊறுகாய் இல்லாமல் உணவு நிறைவடையாது. ஊறுகாயை ஆண்டு முழுவதும் ரசித்தாலும், சில வகையான ஊறுகாய்களை குளிர்காலத்தில் மட்டுமே சாப்பிட்டு ரசிக்க முடியும்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இன்ஸ்டன்ட் பச்சை மஞ்சள் ஊறுகாய். இதனை செய்ய வெறும் 3 பொருட்கள் மட்டுமே போதும். இதனை செய்ய எண்ணெய் அல்லது வேறு எந்த ஆரோக்கியமற்ற பொருட்களும் தேவையில்லை.

மஞ்சள் ஊறுகாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
*250 கிராம் பச்சை மஞ்சள்
*உப்பு சுவைக்கேற்ப
* 3 எலுமிச்சை
* இஞ்சி
*பச்சை மிளகாய்

செய்முறை:
பச்சை மஞ்சள் வேர்களில் சேறு இருக்கக்கூடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவவும்.

அடுத்து மஞ்சளை உரித்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். இஞ்சியையும் தோலுரித்து வெட்டி வைக்கவும். 3 எலுமிச்சை பழத்தையும் தனியாக ஒரு கிண்ணத்தில் பிழியவும்.

ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு கலக்கவும். இப்போது எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கவும். இது ஊறுகாயை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவும்.

கிண்ணத்திலிருந்து, ஊறுகாயை சுத்தமான கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிக்கு மாற்றவும். பாட்டில் நன்கு சுத்தம் செய்யப்பட்டு முற்றிலும் உலர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், மஞ்சள் ஊறுகாய் கெட்டுவிடும்.

Views: - 399

0

0