காய்கறிகள் சேர்த்த ராகி சூப்… அட்டகாசமா இருக்கும்.. டிரை பண்ணி பாருங்க!!!

ராகி சூப் ஒரு சுவையான இரவு உணவு. ராகி மாவுடன் பல்வேறு காய்கறிகள் சேர்க்கப்படும் போது இந்த சூப் சுவையானது மட்டுமல்ல, உங்கள் அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்ட சமச்சீரான உணவாக அமைகிறது.

நீங்கள் டயட் அல்லது எடைக் குறைப்பு திட்டத்தில் இருந்தால், இந்த சூப் உங்களுக்கு சிறந்த முறையில் வேலை செய்யும்.

ராகி வெஜிடபிள் சூப் செய்முறை:-

ராகி சூப் சூப் தேவையான பொருட்கள்
* 1 கப் கலந்த காய்கறிகள் (கேரட், பட்டாணி, காலிஃபிளவர் மற்றும் பீன்ஸ்)

* 2 டீஸ்பூன் ராகி மாவு

*1 தேக்கரண்டி மிளகு தூள்

*உப்பு தேவையான அளவு

* 1 டீஸ்பூன் நெய்

*1 பிரியாணி இலை

* பூண்டு 4 பல்

* 2 மற்றும் ¼ கப் தண்ணீர்

செய்முறை:
* நெய் சேர்த்து பிரியாணி இலை மற்றும் நறுக்கிய பூண்டை 2 நிமிடம் வதக்கவும்.

*கலந்த காய்கறிகளைச் சேர்த்த பிறகு, ஒரு நிமிடம் வதக்கவும்.

* இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

* நன்கு கலந்து உப்பு சேர்க்கவும்.

* கலவையை 6 முதல் 9 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* காய்கறிகள் சாஃப்டாக வேண்டுமெனில் மேலும் 2 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் ராகி மாவை கலக்கவும். கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.

*சூப்பில் கலந்து வைத்த ராகி கலவையைச் சேர்க்கவும்.

*மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

* கலவையை 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடை இடையே கலந்து விடவும்.

* அடுப்பை அணைக்கவும். பரிமாறுவதற்கு முன், பிரியாணி இலையை அகற்றவும்.

*வெஜிடபிள் ராகி சூப் தயார். சூடாக பரிமாறவும்!

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.