பெரும்பாலானவர்களின் வீட்டில் இட்லி மாவு அல்லது தோசை மாவு நிச்சயமாக இருக்கும். காலை மற்றும் இரவு நேர உணவு என்பது இட்லி அல்லது தோசையோடு தான் ஓடும். தோசை மாவு இருந்தால் ஈஸியாக அன்றைய டிபனை சமாளித்து விடலாம். ஆனால் மாவு இல்லாத சமயத்தில் என்ன டிபன் செய்வது என்று யோசிப்பது பல பெண்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக நேரம் எடுக்காத டிபன் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இவர்களுக்காக தோசை மாவு இல்லாத சமயத்தில் ஒரு இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
1 கப்- கோதுமை மாவு
1/2 கப்- ரவை
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
2 பச்சை மிளகாய் நறுக்கியது
சிறிதளவு கொத்தமல்லி தழை
தேவையான அளவு உப்பு 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
3/4 கப் கெட்டியான தயிர் தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
இந்த இன்ஸ்டன்ட் அடை செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் ரவையை ஒரு அகலமான பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
பின்னர் ஒரு தக்காளி மற்றும் 2 பச்சை மிளகாயையும் நைசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் 3/4 கப் அளவு கெட்டியான தயிரை ஊற்றி மீண்டும் நன்றாக கிளறவும்.
அடுத்தபடியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு மாவை கொண்டு வரவும்.
இப்போது அடை மாவு தயாராக உள்ளது.
தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
இந்த மாவை வழக்கமான தோசை போல அதிகமாக பரப்ப கூடாது, ஊத்தாப்பம் போல ஊற்ற வேண்டும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியதும் காரசாரமான சட்னி வைத்து பரிமாறவும்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.