பெரும்பாலானவர்களின் வீட்டில் இட்லி மாவு அல்லது தோசை மாவு நிச்சயமாக இருக்கும். காலை மற்றும் இரவு நேர உணவு என்பது இட்லி அல்லது தோசையோடு தான் ஓடும். தோசை மாவு இருந்தால் ஈஸியாக அன்றைய டிபனை சமாளித்து விடலாம். ஆனால் மாவு இல்லாத சமயத்தில் என்ன டிபன் செய்வது என்று யோசிப்பது பல பெண்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக நேரம் எடுக்காத டிபன் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இவர்களுக்காக தோசை மாவு இல்லாத சமயத்தில் ஒரு இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
1 கப்- கோதுமை மாவு
1/2 கப்- ரவை
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
2 பச்சை மிளகாய் நறுக்கியது
சிறிதளவு கொத்தமல்லி தழை
தேவையான அளவு உப்பு 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
3/4 கப் கெட்டியான தயிர் தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
இந்த இன்ஸ்டன்ட் அடை செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் ரவையை ஒரு அகலமான பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
பின்னர் ஒரு தக்காளி மற்றும் 2 பச்சை மிளகாயையும் நைசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் 3/4 கப் அளவு கெட்டியான தயிரை ஊற்றி மீண்டும் நன்றாக கிளறவும்.
அடுத்தபடியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு மாவை கொண்டு வரவும்.
இப்போது அடை மாவு தயாராக உள்ளது.
தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
இந்த மாவை வழக்கமான தோசை போல அதிகமாக பரப்ப கூடாது, ஊத்தாப்பம் போல ஊற்ற வேண்டும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியதும் காரசாரமான சட்னி வைத்து பரிமாறவும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.