சன்டே என்றாலே நான்-வெஜ் இல்லாமல் இருக்காது. அதிலும் மட்டன் என்றால் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவாக மட்டன் சமைப்பதற்கு சற்று நேரமாகும். ஆனால் பத்தே நிமிடத்தில் சுவையான மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம்- 2 கையளவு
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 3
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 10
முந்திரி பருப்பு- 10
தேங்காய் துருவல்- 1 கப்
எண்ணெய்- 3 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
பிரியாணி இலை- 1
பட்டை- 2
கிராம்பு- 3
ஏலக்காய்- 3
கல்பாசி- சிறிதளவு
அன்னாசிப்பூ- 1
சோம்பு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
கொத்தமல்லி- ஒரு கையளவு
செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் இரண்டு கையளவு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய், ஒரு பட்டை, ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
*ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*இப்போது நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
*தக்காளி வதங்கி வந்ததும் நன்கு சுத்தம் செய்து வைத்த மட்டனை சேர்த்து கிளறவும்.
*இதனுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி கொள்ளலாம்.
*மட்டன் 25% வெந்தவுடன் நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும்.
*கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
*இப்போது குக்கரை மூடி ஐந்து விசில் வரவிட்டு எடுக்கவும்.
*பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி மேலும் பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
*அவ்வளவு தான் சுவையான மட்டன் கிரேவி பத்தே நிமிடத்தில் தயார்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.