மணத்தக்காளி கீரை பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. இது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியது. வாய்ப்புண், வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த கீரையை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரையை வைத்து மொறு மொறு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி பூண்டு பல் – 4
இஞ்சி துண்டு – 4
பச்சை மிளகாய் – இரண்டு சின்ன வெங்காயம் – 10 மணத்தக்காளி கீரை – ஒரு கைப்பிடி
தோசை மாவு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
*பின்னர் தோலுரித்த பூண்டு, இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*இப்போது சின்ன வெங்காயம் சேர்த்து அது கண்ணாடி போல மாறும் வரை வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
*கீரை வதங்கிய பின் அனைத்து பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*இந்த கலவையை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து வழக்கம் போல தோசை சுட வேண்டியது தான்.
*அவ்வளவு தான்… ஆரோக்கியமான மொறு மொறு மணத்தக்காளி கீரை தோசை சாப்பிட தயாராக உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.