தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர் சேரன்.நல்ல நடிகராகவும் தன் திறமையை பல திரைப்படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.சினிமாவில் இருக்கும் ஆர்வத்தால் சென்னை வந்தார் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.
கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார்.தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து பொற்காலம்,வெற்றிக் கொடி கட்டு,பாண்டவர் பூமி,போன்ற சமூக அவலங்களை சித்தரிக்கும் திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்கள் சாதாரண மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது.
இயக்குனர் சேரனின் நீண்டநாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறி உள்ளது.இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிகர் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ‘நரிவேட்டா’ படத்தில் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிறார் சேரன்.மலையாள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.