தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர் சேரன்.நல்ல நடிகராகவும் தன் திறமையை பல திரைப்படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.சினிமாவில் இருக்கும் ஆர்வத்தால் சென்னை வந்தார் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.
கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார்.தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து பொற்காலம்,வெற்றிக் கொடி கட்டு,பாண்டவர் பூமி,போன்ற சமூக அவலங்களை சித்தரிக்கும் திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்கள் சாதாரண மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது.
இயக்குனர் சேரனின் நீண்டநாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறி உள்ளது.இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிகர் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ‘நரிவேட்டா’ படத்தில் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிறார் சேரன்.மலையாள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.