வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு மீது விஜய்க்கு திடீர் கோபம்… என்ன காரணம் தெரியுமா..? அவரு கோபம் நியாயம் தானே…!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 6:21 pm
Quick Share

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.

varisu thunivu - updatenews360

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்கு காரணமே வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப்போனது தான் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டு, திடீரென சில காரணங்களால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் இரு நாட்களுக்கு பின் தேதி வெளியாகும் என தில் ராஜு அறிவித்தார்.

இதனால் விஜய் சற்று அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தில் ராஜு மீது விஜய்க்கு கோபம் வந்ததாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அறிவித்தபடி 11ம் தேதியே தெலுங்கிலும் வாரிசு படத்தை வெளியிட்டிருந்தால், இன்னும் வசூலை அள்ளியிருக்கும் என்று விஜய் நினைக்கிறார் போலிருக்கு.

Views: - 516

0

0