நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் டிரை ஃப்ரூட்ஸ் மில்க்!!!

குளிர்காலத்தில், உடலை சூடாக வைத்திருக்கும் உணவுகளை உணவில் சேர்த்து சாப்பிட விரும்புகிறோம். வெப்பநிலை குறைவதால், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களின் நுகர்வு கணிசமாக அதிகரிக்கிறது. இவற்றுக்குப் பதிலாக, நீங்கள் உலர்ந்த பழ பால் (Dry fruits milk) சாப்பிட்டு பார்க்கலாம். இதை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலமாக, உங்களை உடலை சூடாகவும், சுறுசுறுப்பாகவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம். இந்த சுவையான பாலை காலையிலோ அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாகவோ உட்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை அனுபவிக்கலாம்.

இந்த பானத்தை தயாரிக்க, நீங்கள் பின்வரும் பொருட்களை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்
– 2 பேரீச்சம்பழங்கள்
2 உலர்ந்த அத்திப்பழம்
6 பாதாம், 4 அக்ரூட் பருப்புகள்
2 டீஸ்பூன் எள்
4-5 இழைகள் குங்குமப்பூ.

காலையில், ஊற வைத்த பாதாமின் தோலை உரித்து, பேரீச்சம்பழத்தில் இருந்து விதைகளை அகற்றவும். அடுத்து, எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இதனோடு 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்டில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து அதனை 1 கப் சூடான பாலுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

உலர்ந்த பழங்கள் கொண்டு செய்யப்படும் பாலின் நன்மைகள் பின்வருமாறு:-

*ஆற்றலை அதிகரிக்கும்
பளபளப்பான மற்றும்

*பொலிவான சருமத்தை பெற உதவுகிறது

*நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

*உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

*இந்த பால் குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.

*பாலில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

*இது உங்கள் முடி, நகங்கள் மற்றும் தோலுக்கு தேவையான நல்ல புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

இந்த உலர்ந்த பழம் பால் சாப்பிட சிறந்த நேரம் காலை ஆகும். காலையில் குடிக்க முடியாதவர்கள் இரவில் உறங்கும் முன் குடிக்கலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

2 hours ago

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…

3 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

4 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

5 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

6 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

7 hours ago

This website uses cookies.