ஆரோக்கியம்

காலை சீக்கிரமே எழுவதால எவ்வளவு பலன் கிடைக்குது பாருங்க!!!

நாளின் பிற நேரங்களை காட்டிலும் காலைகள் என்பது பொறுமையாக அனுபவித்து மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் காலை பின்பற்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வழக்கம் இருக்கும். காலை எழுந்ததும் காலை கடன்களை முடித்துவிட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு காலையில் ஒரு சில மணி நேரம் வீட்டில் செலவிடுவோம். அந்த சமயத்தில் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவது நம்முடைய மனது மற்றும் உடலை மீட்டமைத்து நாளின் மீதமுள்ள நேரத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ளலாம். காலை விரைவாக எழுவதால் வீட்டில் செலவிடுவதற்கு உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். மேலும் உங்களுடைய நாளை நீங்கள் பொறுமையாக ஆரம்பிக்கலாம், அவசர அவசரமாக ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்காது. அதிகாலை எழுவதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான பலன்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

மற்றவர்கள் விழிப்பதற்கு முன்பு அதிகாலை விரைவாக எழுவது நமக்காக நாம் போதுமான அளவு நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. தியானம் அல்லது வொர்க் அவுட் செய்வது போன்ற பல்வேறு விதமான வேலைகளுக்கு நமக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். மேலும் நமக்கு வாழ்க்கையில் கிடைத்தவற்றுக்காக நன்றி செலுத்தவும், வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும் நீங்கள் டைரி எழுதுவதைக் கூட முயற்சி செய்து பார்க்கலாம்.

அலுவலகத்திற்கு செல்லும் பொழுது கடைசி நிமிடத்தில் கிளம்பி ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு, டென்ஷன் ஆகி அலுவலகத்தில் தேவையில்லாத காரணங்கள் சொல்லி, திட்டு வாங்குவதற்கு பதிலாக அதிகாலை நீங்கள் எழுந்து விட்டால் அலுவலகத்திற்கு முன்னதாகவே கிளம்பி சரியான நேரத்திற்கு நிதானமாக செல்லலாம்.

நாம் அதிகாலை எழும்பொழுது நம்முடைய உடலில் உள்ள சர்க்காரியன் கடிகாரம் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும். இதனால் இரவு நேரத்தில் நமக்கு தூக்கம் விரைவாக வந்துவிடும். மேலும் தினமும் நீங்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யலாம். காலை ஃபிரஷாக எழுந்து மகிழ்ச்சியோடு அந்த நாளுக்கான வேலைகளை ஆரம்பிக்கலாம்.

நமக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது அது நம்முடைய சருமம் மற்றும் தலைமுடியின் தரத்தை பாதிக்கலாம். இதனால் வெளிர் சருமம், முகப்பரு, சுருக்கங்கள் போன்றவை உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான தூக்கம் அட்டவணையை பின்பற்றுவது உங்களுடைய தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.

காலை உணவை நம்மில் பெரும்பாலானோர் அவசர அவசரமாக விழுங்குவதுண்டு. ஆனால் காலை உணவை நாம் மிகவும் பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அதிகாலை எழுந்து விட்டால் அதனை நீங்கள் நிச்சயமாக செய்யலாம். மேலும் உங்கள் குடும்பத்தோடு கூடுதல் நேரம் செலவழிப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.