பல வீடுகளில் இரவு உணவுக்குப் பிறகு, ஒரு நடைபயிற்சிக்கு செல்வது ஒரு வழக்கமாக உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் நடக்கிறார்கள். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்பது நம்பப்படுகிறது. ஆனால், சாப்பிட்ட பிறகு நடப்பது உண்மையில் செரிமானத்திற்கு நன்மை பயக்குமா?
உங்கள் உணவை முடித்த பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. உணவை உடைத்து உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. செரிமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நம் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும். இதனால் குடல் செயல்பாடு மேம்படலாம் மற்றும் மலச்சிக்கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.
உணவுக்குப் பிறது நடப்பது செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடலானது உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும்.
சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பைச் சமாளிக்க, உடல் இன்சுலின் சுரக்கிறது. இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது.
இது இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலானது குளுக்கோஸை ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.
சாப்பிட்ட உடனேயே நடப்பது அசிடிட்டி மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது அதிக நன்மைகளைத் தரும்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.