காய்ச்சல் இருக்கும் போது அஸ்வகந்தா சாப்பிடக்கூடாதுன்னு சொல்ல காரணம் இதுதான்!!!

அஸ்வகந்தா என்பது ஒரு
சிறந்த ஆயுர்வேத தீர்வாகும். அதன் பரவலான நன்மைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது மற்ற மூலிகைகளுடன் கலக்கப்படுகிறது அல்லது தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து எடுக்கப்படுகிறது. இதனை மாத்திரைகள் அல்லது தூள் வடிவில் உட்கொள்ளலாம். உலகமே ஒரு தொற்று வைரஸ் நோயால் தத்தளித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில், இந்த ஆயுர்வேத மருந்தின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய ஆபத்தை குறைப்பதற்கு பயன்படுகிறது. அஸ்வகந்தா சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சலால் அவதிப்படும் போது:
காய்ச்சலால் அவதிப்படும் போது அஸ்வகந்தா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் இம்யூனோமோடூலேட்டரி பண்புகளை செலுத்தும் பல உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் இது நன்மை பயக்கும். ஆனால் உங்களுக்கு ஏற்கனவே அதிக வெப்பநிலை இருக்கும்போது இந்த ஆயுர்வேத மூலிகையை தவிர்க்கவும். ஏனெனில் இது ஜீரணிக்க கடினமாக இருக்கும். காய்ச்சல் உங்களை பலவீனமாக்குகிறது மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் அஸ்வகந்தாவை எடுத்துக் கொண்டால், உங்கள் வயிற்றில் அதை ஜீரணிக்க முடியாமல் போகலாம் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
அஸ்வகந்தா ஒரு சக்திவாய்ந்த மூலிகை மற்றும் அதன் அதிகப்படியான அளவு சில தீவிர பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அல்லது தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ள எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்திக்கு வழிவகுக்கும். மேலும், அஸ்வகந்தாவை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டால், கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இது அனைவருக்கும் பாதுகாப்பானது என்றாலும், நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள், மயக்க மருந்துகள், ஆண்டிடிரஸன்ட்கள் அல்லது நாட்பட்ட நோய்க்கான பிற மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

எவ்வளவு அஸ்வகந்தா எடுப்பது பாதுகாப்பானது?
அஸ்வகந்தாவுக்கு நிலையான டோஸ் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க உங்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிலை சார்ந்தது. ஆனால் ஆய்வுகளின்படி, மூலிகையின் பாதுகாப்பான டோஸ் 125 மிகி முதல் 5 கிராம் வரை இருக்கும். இது ஒரு நாளைக்கு 2-4 அளவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வகந்தாவை எடுக்க சரியான நேரம்:
காலையிலோ மாலையிலோ சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது லேசான அசௌகரியத்தை ஏற்படுத்தும். அப்படியானால், காலை உணவுக்குப் பிறகு அல்லது சிறிய சிற்றுண்டிக்குப் பிறகு அல்லது இரவில் எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஓய்வெடுக்கவும் மற்றும் நன்றாக தூங்கவும் உதவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

13 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

13 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

14 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

14 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

15 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

15 hours ago

This website uses cookies.