மொபைலை இரவு முழுவதும் சார்ஜ் செய்வதால் ஏற்படும் பேராபத்துகள்!!!

Author: Hemalatha Ramkumar
11 September 2022, 3:14 pm
Quick Share

இன்றைய காலகட்டத்தில், அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை பொதுவானது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஸ்மார்ட்போனின் கதிர்வீச்சு உங்கள் ஆரோக்கியத்தை வேறு பல வழிகளிலும் பாதிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மொபைல் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் இரவு பகலாக மொபைலில் ஈடுபடுவதும் பல வகையான ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இரவு படுத்து உறங்கும் முன் ஃபோனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிடுபவர்கள் ஏராளம். இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

உங்கள் மொபைலை ஒரு இரவு முழுவதும் சார்ஜ் செய்து விட்டு தூங்கினால், அது தொலைபேசி மற்றும் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால் மொபைலின் பேட்டரி கெட்டுப் போகும். இதன் காரணமாக, அது வெடிக்கக்கூடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

மனஅழுத்தம்:- அதே சமயம் மொபைலை எப்போதும் பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. நீங்கள் குளியலறையில் மொபைலைப் பயன்படுத்தினால், மனச்சோர்வு மேலும் அதிகரிக்கிறது. உங்கள் மொபைலை குளியலறைக்கு எடுத்துச் செல்வதன் மூலம், உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறீர்கள்.

Views: - 302

0

0