ஒரு சில நேரங்களில் அவசரத்தில் சமைக்கும் போது, உணவுகள் கரிந்து போவதுண்டு. கரிந்து போன உணவாக இருந்தாலும், அதனை வீணாக்கக்கூடாது என்பதற்காக ஒரு சிலர் அதனை சாப்பிட்டு விடுவார்கள். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். கரிந்து போன உணவுகளை சாப்பிடுவது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, கரிந்த உணவுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பைக் கண்டறியும் முயற்சிகள் கூட செய்யப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் கரிந்த உணவை சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோய் வரும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் நீங்கள் கரிந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்காவிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நாம் சமைக்க ஆரம்பித்தவுடன், உணவின் அமைப்பு மற்றும் அதன் நிறம் மாறுவதைக் காண்கிறோம். இது மென்மையாக மாறுவது மட்டுமல்லாமல், சமைக்கும் போது பல இரசாயன மாற்றங்களுக்கும் உட்படுகிறது. இவை அனைத்தும் மனித நுகர்வுக்கு ஏற்றதாக மாற்ற உதவுகிறது. வெப்பம் இரசாயன எதிர்வினைகளை துரிதப்படுத்துகிறது. இது உணவில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. கரிந்து போன உணவு ஜீரணிக்க கடினமாகவும், வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது. இது நமக்கு ஆரோக்கியமற்ற அக்ரிலாமைடு போன்ற சேர்மங்களை வெளியிடுகிறது.
அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது, உருளைக்கிழங்கு, தானியங்கள், காபி மற்றும் ரொட்டி போன்ற சில உணவுகளில் அக்ரிலாமைடு உருவாகலாம். அதிக அளவு அக்ரிலாமைடு புற்றுநோயை ஏற்படுத்துவதாக விலங்கு ஆராய்ச்சியில் காட்டப்பட்டுள்ளது.
அக்ரிலாமைடு புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும், கரிந்து போன உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு ஃபிரஷான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அதே போல அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். புற்றுநோயைத் தடுக்கும் உணவுகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.