நீங்கள் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் எரிச்சலூட்டும் வீக்கம் ஆகியவற்றை அனுபவிப்பவராக இருந்தால், இனி உங்கள் வலியைப் பற்றி மறந்து விடுங்கள். ஆச்சரியமா இருக்கா… உண்மை தான். கீழே சொல்லப்பட்டுள்ள உடற்பயிற்சிகளைச் செய்வது மாதவிடாய் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
நடைபயிற்சி
நடைபயிற்சி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாதவிடாய் வலியைப் போக்கவும் எளிதான வழியாகும். மேலும் இது பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உணரும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் சுழற்சியின் பிற்பகுதியில் உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்படுவதால், நடைபயிற்சி உங்கள் மாதவிடாயின் முடிவில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
முழங்கால் முதல் மார்பு வரை நீட்டுதல்
இந்த நிதானமான உடற்பயிற்சி உங்கள் அடிவயிற்றில் உள்ள தசைப்பிடிப்பைத் தணிக்க உதவும். உங்கள் முதுகு தரையில் படுமாறு படுத்து, ஒரு காலை நீட்டவும். பின்னர் மெதுவாக மற்ற முழங்காலை உங்கள் கன்னத்தை நோக்கி இழுக்கவும். இந்த தோரணையை சில நிமிடங்கள் வைத்திருங்கள் மற்றும் மறு காலால் மீண்டும் இதையே செய்யவும்.
யோகா
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், உங்கள் உள் அமைதியைக் கண்டறிய உதவுவதற்கும் உதவுவது போல யோகாவானது தசைப்பிடிப்பு, தசைச் சோர்வு மற்றும் வலி போன்ற பல விரும்பத்தகாத மாதவிடாய் அறிகுறிகளையும் குறைக்க உதவும். உங்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சிகளைச் செய்வது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
உட்கார்ந்த கால்களுடன் முன்னோக்கி வளைதல்
உங்கள் கால்களை நீட்டிக் கொண்டு, உங்கள் இரு கைகளையும் முன்னோக்கி வளைத்து கால்கள் மீது வைக்கவும். இதன் போது உங்கள் வயிற்றை உள்நோக்கி இழுத்தவாறு இந்த நிலையில் 3 நிமிடங்கள் வரை வைத்திருங்கள்.
லேசான எடை தூக்குதல்
உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க முயற்சிக்கும்போது, கடுமையான உடற்பயிற்சி செய்வது சிறந்த யோசனையாக இருக்காது. ஆனால் குறைவான எடை கொண்ட எடை தூக்குதல் உண்மையில் எரிச்சலூட்டும் வலிகளைத் தணிக்க உதவும்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.