வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். பல முறை குழந்தைகள் பசியின்மை, வயிற்று வலி அல்லது வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். உங்கள் வீட்டு குழந்தையும் இது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வயிற்றுப் புழுக்களால் குழந்தைக்கு வயிற்று வலி, எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் ஏற்படலாம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் நொறுக்குத் தீனிகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மீதான மோகம் உடல் பருமனை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பிக்கிறது. வயிற்றுப் புழுக்களை அகற்ற பல மருந்துகள் இருந்தாலும், இதைத் தவிர, பின்வருன போன்ற சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அதை நீங்கள் பின்பற்றலாம். இப்போது அது குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், துளசி இலைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம். வயிற்றுப் புழுக்கள் துளசி இலைகள் அல்லது துளசிச் சாறுகளால் கொல்லப்படுகின்றன. இதனால், வயிற்றில் புழுக்கள் இருந்தால், குழந்தைகளுக்கு துளசி இலையின் சாற்றைக் கொடுக்கவும்.
குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை தண்ணீருடன் விழுங்க வேண்டும். இந்த செயல்முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் தேங்காய் எண்ணெயில் செய்த பொருட்களை சாப்பிட கொடுக்கவும். தேங்காய் எண்ணெய் வயிற்றில் உள்ள புழுக்களையும் நீக்குகிறது.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு நான்கைந்து பச்சை பூண்டு பற்களை சாப்பிட கொடுக்கவும்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.