இரவில் தூங்கும் முன் ஏதாவது சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. சில சமயம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு சிலர் தூங்குவார்கள், சில சமயம் சிலர் பழங்களை சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். சிந்திக்காமல் நாம் தூங்கும் முன் எதையும் உட்கொள்கின்றோம். கொழுப்பு நிறைந்த எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது மிகவும் மோசமானது. குறிப்பாக இரவு நேரத்தில் இவற்றை சாப்பிடவே கூடாது. ஏனெனில் அது உங்கள் செரிமானத்தை கெடுக்கும். இனி வரும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தூங்கும் முன் என்னென்ன உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இரவில் தூங்கும் முன் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களுக்கு அஜீரணம், வாயு பிரச்சனையை தரக்கூடியது. மேலும் நீங்கள் நோய்வாய்ப்படலாம்.
தூங்கும் முன் டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டாம். டார்க் சாக்லேட் உட்கொள்வதன் மூலம், உங்கள் மனம் சுறுசுறுப்பாக மாறும். இது தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
இரவில் தூங்கும் முன் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனுடன் அதிக காரமான உணவுகளை உண்பதால் உடலில் வெப்பம் உண்டாகிறது.
இரவு உணவில் தக்காளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இரவில் தக்காளி சாப்பிடுவதால், வாயு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக, இரவில் தக்காளி சாப்பிட வேண்டாம்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.