ஆரோக்கியம்

உங்க வீட்டு அஞ்சறைப் பெட்டியில இந்த ஒரு பொருள் இருக்கிற வரைக்கும் ஆஸ்துமா நினைச்சு கவலையே பட வேண்டாம்!!!

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்று சொல்லப்பட்டதற்கு பின்னணியில் வலிமையான பல காரணங்கள் உள்ளன. நம்முடைய அன்றாட சமையலில் கடுகு பயன்படுத்தப்படுவது ஏன் என்று என்றைக்காவது யோசித்து பார்த்துள்ளீர்களா? குழம்பு, கூட்டு, பொரியல் என்று எல்லா வகையான உணவுகளுக்கும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பது அதன் சுவையை கூட்டிக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சுவை மட்டுமல்லாமல் கடுகில் பல்வேறு ஆரோக்கிய நலன்களும் மறைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது பலருக்கு தெரிவதில்லை. எனவே கடுகை பற்றி நீங்கள் அறியாத பல நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கடுகு விதைகளில் உணவு நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது நம்முடைய செரிமானத்துக்கு நன்மை தருகிறது. மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. செரிமானத்திற்கு அவசியமான நொதிகளை தூண்டுவதன் மூலமாக கடுகு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் உணவு மூலமாக நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதையும் கடுகு உறுதி செய்கிறது. ஒருவேளை நீங்கள் வயிற்று உப்புசம் அல்லது அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால் அதிலிருந்து இயற்கையான நிவாரணம் பெறுவதற்கு கடுகை உங்கள் தினசரி உணவில் பயன்படுத்துங்கள். 

மழைக்காலத்தில் பலருக்கு ஆஸ்துமா அல்லது சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு கடுகு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை தணிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடுகு விதையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சுவாசிப்பதை மேம்படுத்தவும், சைனஸ் பிரச்சினைக்கான இயற்கையான தீர்வாக அமைகிறது. 

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சருமத்தின் ஆரோக்கியத்திலும் கடுகு முக்கிய பங்கு கொண்டுள்ளது. விதைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பூஞ்சை தொற்றுகள் போன்ற பல்வேறு விதமான தோல் நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் காயங்களை விரைவாக ஆற்றுவதற்கும் கடுகு விதையை பயன்படுத்தலாம். காயங்கள் மீது கடுகு விதை எண்ணெயை தடவுவது வீக்கத்தை குறைத்து தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

இதையும் வாசிக்கலாமே: ஒரு ரூபா செலவு இல்லாம உங்க தலைமுடிய ஸ்ட்ராங்கா, சாஃப்டா மாத்துவோமா…???

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள கடுகு விதைகள் நம்முடைய இதயத்திற்கும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் நமக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. அது மட்டுமல்லாமல் கடுகு விதையில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது. உங்களுடைய அன்றாட உணவில் கடுகு விதைகளை சேர்த்து வரும்போது உங்களுக்கு இதயம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. 

இறுதியாக கடுகு விதையில் உள்ள வைட்டமின்கள் A, C மற்றும் K ஆகியவை வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மிக மோசமான ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிட்டு தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உங்களுடைய உணவுகளில் கடுகு விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

29 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.