உடற்பயிற்சிக்கு பிறகு இத குடிச்சா உடம்பும் ஃபிட்டா இருக்கும்… சருமமும் பொலிவாகும்!!!

Author: Hemalatha Ramkumar
25 February 2022, 10:07 am
Quick Share

இன்றைய அவசர உலகில் உடல் ஆரோக்கியம் மற்றும் நம் அழகை பராமரிப்பது ஒரு சவாலான விஷயம். பலருக்கு இதனை செய்ய நேரமில்லாமல் போகிறது. இதற்கான எளிய தீர்வுகளை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வாக இருக்கும் உடற்பயிற்சிக்கு பிந்தைய பானத்தின் செயல்முறையைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். இந்த பானம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு பொலிவான சருமத்தையும் தருகிறது.

போஸ்ட் வொர்க்அவுட் பானம்:
தேவையானவை:
வீட்டில் செய்யப்பட்ட தேங்காய் பால்- 2 கப் தண்ணீர்
வே புரத தூள்- ஒரு பெரிய கரண்டி
ஆளி விதைகள்- ஒரு தேக்கரண்டி
வாழைப்பழம் (சிறிய வகை)- 2
இலவங்கப்பட்டை தூள்- 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை தேன்- 1 தேக்கரண்டி

செய்முறை:
*ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பாலை ஊற்றவும்.
*இப்போது ஜாடியில் 2 கப் தண்ணீரை ஊற்றவும்.
*ஒரு ஸ்கூப் வே புரோட்டீன் பவுடரை சேர்க்கவும்.
*அடுத்து 1 தேக்கரண்டி முழு ஆளி விதைகளை சேர்க்கவும்.
*2 வாழைப்பழங்களை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
*இவற்றை நன்கு அரைக்கவும்.
*அரைத்த பானத்தை ஒரு பெரிய டம்ளரில் ஊற்றவும்.
*மேலே ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் தூவவும்.
கூடுதல் இனிப்புக்காக ஒரு
தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.
*உங்கள் உடற்பயிற்சி அமர்வுக்குப் பிறகு உடனடி ஆற்றலை அதிகரிக்க இதனைப் பருகுங்கள்!

Views: - 742

0

0