ஆரோக்கியம்

10 உலர்ந்த திராட்சை இருந்தா போதும்… மலச்சிக்கல் பிரச்சினைக்கு குட்-பை!!!

உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதே உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் அதனுடைய பலன்கள் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கிறது. காலை எழுந்ததும் இந்த தண்ணீரை நீங்கள் குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்படும். இப்போது திராட்சை தண்ணீரை பருகுவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

திராட்சை தண்ணீரில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. வைட்டமின்கள் C மற்றும் K முதல் இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வரை திராட்சை தண்ணீரில் உள்ளதால் இது நம்முடைய உடலுக்கு ஊட்டச்சத்து ஊக்கியாக அமைகிறது. இதனை தினமும் பருகி வந்தீர்களானால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.

திராட்சை தண்ணீர் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. திராட்சைகளில் காணப்படும் கரையும் நார்சத்து செரிமானத்தை மேம்படுத்தி இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
வழக்கமான முறையில் இதனை நீங்கள் பருகி வந்தால் உங்களுடைய செரிமான அமைப்பு மேம்படும்.

திராட்சை தண்ணீரில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். மேலும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் ஆக்ஸிடேஷனை தவிர்ப்பதன் மூலமாக தமனிகளில் பிளேக் உருவாவதை தவிர்த்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

திராட்சை தண்ணீரில் குறைந்த கிளைசிமிக் எண் இருப்பதால் இது டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் பருகுவதற்கு ஏற்றதாக அமைகிறது. கரையும் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் அடங்கிய திராட்சை தண்ணீர் நமது உடலில் பொறுமையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் திடீர் குளுக்கோஸ் அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்த்து, நிலையான ஆற்றல் அளவுகளை பராமரிக்கிறது.

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படும் இந்த திராட்சைத் தண்ணீர் நமது நோய் எதிர்ப்ப அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தானது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டி ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்குகிறது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே திராட்சை தண்ணீரில் இருப்பதால் இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதை தவிர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் காணப்படும் திராட்சைத் தண்ணீர் ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. இந்த திராட்சை தண்ணீரை தினமும் பருகி வந்தால் வயதான அறிகுறிகளை போக்கி உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் மீட்டெடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

8 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

9 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

9 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

11 hours ago

This website uses cookies.