ஆரோக்கியம்

குளிர் காலத்தில் நம்மை தாக்க தயாராக இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள்… எச்சரிக்கையா இருக்க என்ன செய்யணும்!!!

குளிர்காலத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். வானிலை குளுமையாகவும், வறண்ட நிலையில் இருப்பதாலும் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து அதனால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாதிரியான சூழல் வைரஸ்கள் பரவுவதற்கு தோதானவை. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நம்மை போதுமான அளவு வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இதனால் வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இது தவிர வாழ்க்கை முறை மற்றும் உணவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் ஒரு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்த குளிர் காலத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில உடல்நல பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

சளி மற்றும் காய்ச்சல்

குளிர்ந்த மற்றும் வறண்ட காற்றில் பரவும் வைரஸ்கள் காரணமாக நமக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய வெளிச்சம் போதுமான அளவு கிடைக்காததால் நோய் எதிர்ப்பு அமைப்பு குறைந்து, சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வையுங்கள். மேலும் கதகதப்பான சூழலில் இருப்பது சளி மற்றும் காய்ச்சலில் இருந்து தப்பிப்பதற்கு உதவும். 

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி

குளிர்ந்த காற்று ஆஸ்துமா பிரச்சனைகளைத் தூண்டலாம். எனவே ஹியுமிடிஃபையர்கள் பயன்படுத்துவது வாயையும், மூக்கையும் ஸ்கார்ஃப் கொண்டு மூடுவது போன்றவை சுவாசிப்பதை எளிதாக்கும். 

மூட்டு வலி மற்றும் ஆர்த்ரைட்டிஸ் 

குளிர்ந்த வெப்பநிலை தசைகளை இறுக்கி மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும். இது ஆர்த்ரைட்டிஸ் வலியை இன்னும் மோசமாக்கும். எனவே மூட்டுகளை கதகதப்பாக வையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், வீக்கத்தை குறைப்பதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். 

இதையும் படிக்கலாமே: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீட்டிலேயே மருதாணி ஹேர் பேக்!!!

வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா 

குளிர்ந்த வறண்ட காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் பெரும்பாலும் வறட்சி, அரிப்பு மற்றும் எக்ஸிமா ஏற்படும். ஆகவே தடிமனான மாய்சரைசர்களை உபயோகிப்பது ஹியூமிடிஃபையர் பயன்படுத்துவது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை பெற்று தரும். 

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 

குளிர்ந்த வெப்பநிலைகள் ரத்தநாளங்களை குறுக செய்து அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதயம் வேலை செய்வதில் சிக்கலை உண்டாக்கும். இதன் காரணமாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிலும் ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். 

சுவாசத் தொற்றுகள் 

வின்டர் சீசனில் பிரான்கைட்டிஸ் மற்றும் நிமோனியா போன்ற சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரலாம். குளிர்ந்த வானிலை நம்முடைய சுவாச அமைப்பை வலுவிழக்க செய்து அதில் எளிதாக தொற்று ஏற்பட வழிவகுக்கும். எனவே கதகதப்பாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள், அதிக கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், அடிக்கடி கைகளை கழுவவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

7 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

29 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

31 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

3 hours ago

This website uses cookies.