காஸ்ட்லி டை வேண்டாம்… இயற்தையான முறையில் இளநரையை போக்க உதவும் எளிய வழிகள்!!!

வயதாகும்போது தான் நரைமுடி தோன்றும் என்ற காலமெல்லாம் மலையேறி போயாச்சு. தற்போது பெரும்பாலான நபர்கள் இளநரையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது ஒருவரது தன்னம்பிக்கையை குறைக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நரைமுடியை மறைக்க பலர் கெமிக்கல் சார்ந்த ஹேர் டைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் தலை முடிக்கு கெமிக்கல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று. இது தலை முடியை இழக்கச் செய்வதோடு ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. ஆகவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்கக்கூடிய ஒரு சில வழிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சிகைக்காய் மற்றும் நெல்லிக்காய்
சிகைக்காய் மற்றும் நெல்லிக்காயாகிய இரண்டு பொருட்களுமே பல நூற்றாண்டுகளாக தலைமுடிக்கு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நரைமுடியை போக்கவும் இவ்விரண்டு பொருட்களும் உதவும் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இதற்கு ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் நான்கு தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சீகைக்காய் பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கிக் கொள்ளலாம். இதனை தலைமுடியில் தடவி இரவு முழுவதும் வைத்துவிட்டு, காலையில் முடியை அலசிவர கூந்தல் கருமையாகும்.

நெல்லிக்காய் மற்றும் கடுகு எண்ணெய் நெல்லிக்காயில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது தலைமுடிக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது ஆகும். நரைமுடி கருமையாக மாற நெல்லிக்காய் பொடியை கடுகு எண்ணெய்யோடு காய்ச்சி வெதுவெதுப்பாக கூந்தலில் தடவ வேண்டும். இவ்வாறு ஒரு சில வாரங்கள் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடி
தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டு பொருட்களும் தலைமுடியின் வளர்ச்சியில் பெரிதும் உதவக்கூடியது. முடி உதிர்வை தடுப்பதோடு இது நரை முடியை கருமையாக மாற்றவும், அதனை வலுவாக வைக்கவும் உதவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயோடு ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி செய்து அதனை காய்ச்சவும். எண்ணெய் வெதுவெதுப்பாக மாறியவுடன் இதனை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி கூடிய விரைவில் கருமையாகவும் வலிமையாகவும் மாறும்.

மருதாணி மற்றும் இண்டிகோ பொடி
பல ஹேர் டைகள் மருதாணி மற்றும் இண்டிகோ பொடியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது நரைமுடியை கருமையாக்க கூடிய பண்புகளை கொண்டுள்ளது. இதற்கு ஒரு பாத்திரத்தில் இண்டிகோ பொடியுடன் ஒரு தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து அதனுடன் முட்டை மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் ஆக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். இதனை ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு முடியை அலசவும். இது நரைமுடியை கருமையாக்குவதோடு முடி உதிர்வையும் தடுக்கக்கூடியது.

கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லியான ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இது போன்ற இயற்கை வைத்தியங்களை முயற்சி செய்து பக்க விளைவுகள் அற்ற முடிவுகளைப் பெறுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

8 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

9 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.