ஆரோக்கியம்

BP அதிகமாவத நினைச்சா கவலையா இருக்கா… டென்ஷன விடுங்க… இருக்கவே இருக்கு மூலிகை வைத்தியங்கள்!!!

ஹைப்பர் டென்ஷன் என்பது இன்று உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்கள் அனுபவித்து வரும் ஒரு பொதுவான உடல்நலக் கோளாறு. ஹைப்பர் டென்ஷன் என்பது அதிக ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பல்வேறு பாரம்பரியமான சிகிச்சைகள், அதாவது மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியமானதாக கருதப்பட்டாலும் ஒரு சிலர் தங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கூடுதலாக மூலிகை வைத்தியங்களை நாடுகின்றனர். மூலிகை வைத்தியங்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு இதயம் உடல்நல பிரச்சனைகளை சமாளிப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயற்கை சிகிச்சைகள் ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய சில மூலிகை வைத்தியங்களை பற்றி பார்க்கலாம். 

பூண்டு 

பூண்டில் காணப்படும் ஆக்டிவ் காம்பவுண்டுகள் அதிலும் குறிப்பாக அலிசின் என்ற காம்பவுண்ட் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பூண்டை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது சப்ளிமெண்டாகவோ வழக்கமான முறையில் எடுத்து வர உங்களுடைய ரத்த அழுத்த அளவுகளில் நல்ல மாற்றத்தை எதிர் பார்க்கலாம்.

மேலும் படிக்க: சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதை உணர்த்தும் அறிகுறிகள்!!!

செம்பருத்தி பூ 

தினமும் செம்பருத்தி பூ டீ பருகுவது சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்த அளவுகளை குறைக்கும். செம்பருத்திப்பூ என்பது லிப்பிடுகளை மேம்படுத்தி இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. செம்பருத்தி பூக்களின் பலன்களை பெறுவதற்கு ஒரு சில காய்ந்த செம்பருத்தி பூக்களை சுடுதண்ணீரில் சேர்த்து அதன் சாறு இறங்கியதும் அதனை நீங்கள் பருகலாம் அல்லது கமர்ஷியலாக கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹைபிஸ்கஸ் டீ பேகுகளை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆலிவ் இலை 

ஆலிவ் இலைகளில் காணப்படும் ஆலிரோபின் என்பது ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஆலிவ் இலை ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது.

செலரி விதைகள் 

செலரி விதைகள் திரவ தக்கவைப்பு திறனை குறைத்து அதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் செலரி விதைகளில் உள்ள காம்பவுண்டுகள் ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் கடைகளில் கிடைக்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தலாம். வழக்கமான முறையில் இதனை எடுத்து வர உங்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ஹவ்தார்ன் அல்லது இதயக்கனி 

ஹவ்தார்ன் தாவரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் ஃபிளவனாய்டுகள் மற்றும் அலிகோமெரிக் ப்ரோஆந்தோசயானிடின்ஸ்  இருப்பதால் இவை இதய செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக இதயம் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.