வாயுத்தொல்லை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபட உதவும் கை வைத்தியம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
வாயுத்தொல்லை ஏற்பட காரணங்கள்:
*புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் வாயுத் தொல்லை ஏற்படும். எனவே, புரத உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை எப்போதும் வழக்கமாக வையுங்கள்.
*உப்பு, காரம், மசாலா ஆகியவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.
*புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது, அவற்றை வேகவைத்து சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறத்த உணவுகளை சாப்பிட்டால் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.
*மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் ஆகியவைவாயுத் தொல்லையை உண்டாக்கக்கூடியவை. ஆகவே, அவற்றை தவிர்ப்பது அல்லது கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பத்தால் வாயுவைக் குறைக்கும்.
*அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். ஆகவே,அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.
வாயுத்தொல்லை நீங்க செய்ய வேண்டியவை:
* சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
*சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
* சீரகம் கலந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.
*ஓமம், கசகசா மற்றும் சுக்கு இவற்றை சம அளவு எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
* வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் சரியாகி விடும்.
*புதினாப்பொடியாகவும், புதினாவை துவையலாகவும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.
* வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உடனடியாக சாப்பிட்டால் கட்டுப்படுத்தி விடலாம்.
* சிறிதளவு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பின் மிதமான சூட்டில் அந்த நீரை ஒரு டம்ளர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். வாயுவைப் போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம்.
*துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும், மூன்று ஸ்பூன் காலை, மாலை என இரு வேலையும், மூன்று நாட்களுக்கு குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.