ஆரோக்கியம்

உங்க வீட்டு சமையலறையில் இந்த பொருட்கள் இருக்க வரைக்கும் புளித்த ஏப்பம் பற்றி கவலையேபட வேண்டாம்!!!

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு ஏப்பம் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் புளித்த ஏப்பம் ஏற்படுவது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இது  நெஞ்சு மற்றும் தொண்டையில் எரிச்சலையும் உண்டாக்கலாம். அதிக எண்ணெய் கலந்த உணவை சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, விரைவாக சாப்பிடுவது போன்றவை காரணமாக இந்த புளித்த ஏப்பம் வரலாம். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுமாயின் இதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய சில வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

சோம்பு 

நம்முடைய வயிற்றுக்கு சோம்பு பல நன்மைகளை அளிக்கிறது. இது வாயுத்தொல்லை, அசிடிட்டி மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது. சோம்பானது செரிமான நொதிகள் உற்பத்தியை அதிகரித்து, உணவு எளிமையாக ஜீரணமாவதை உறுதி செய்கிறது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு 1/2 டீஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். 

புதினா டீ 

சாப்பிட்ட பிறகு உங்களுக்கு வாயு மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சினை இருந்தால் நீங்கள் புதினா டீ பயன்படுத்தி பார்க்கலாம். புதினா இலைகளில் உள்ள குளுமை விளைவு நெஞ்செரிச்சலை ஆற்றி, அசிடிட்டி பிரச்சனையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இது புளித்த ஏப்பம் மற்றும் வாயுவில் இருந்தும் நிவாரணம் தரும்.

இதையும் படிக்கலாமே: இதென்ன கொடுமையா இருக்கு… திங்கட்கிழமைல தான் அதிக ஹார்ட் அட்டாக் நடக்குதா… ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!!!

சீரகத் தண்ணீர் 

சீரகம் செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஒருவேளை சாப்பிட்ட உடனேயே உங்களுக்கு புளித்த ஏப்பம் வந்தால் சீரக தண்ணீரை குடித்து பாருங்கள். இது உங்களுடைய செரிமான அமைப்பை மேம்படுத்தி, வாயு தொல்லை, புளித்த ஏப்பம் மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளை விலக்கி வைக்கும். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி கலந்து பருகவும். 

இஞ்சி 

நம்முடைய வயிற்றுக்கு இஞ்சி எக்கச்சக்கமான நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று புளித்த ஏப்பம். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் விக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சி நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. புளித்த ஏப்பம், வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர நிவாரணம் பெறலாம். 

பெருங்காயம் தண்ணீர்

ஒருவேளை உங்களுக்கு புளித்த ஏப்பம் பிரச்சனை இருந்தால் பெருங்காயம் கலந்த தண்ணீரை பருகுங்கள். பெருங்காயமானது வயிற்று வலி, வாயு, அசிடிட்டி மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சனைகளை போக்குகிறது. இதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயம் சேர்த்து பருகவும். இந்த தண்ணீரை குடித்த ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

5 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

6 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

7 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

7 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

8 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

8 hours ago

This website uses cookies.