மணத்தக்காளி கீரை பல்வேறு சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரம் மருத்துவ பயன்பாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மணத்தக்காளி ஒரு முக்கிய மூலப்பொருள்.
மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் புண்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அல்சர் அல்லது வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டால் மணத்தக்காளியை உங்களுக்கு தான். மணத்தக்காளி கீரையைப் போல எந்த உணவாலும் புண்களை குணப்படுத்த முடியாது. புண்ணுக்கு வழிவகுக்கும் அமில சுரப்பை மணத்தக்காளி தடுக்கிறது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இப்போது மணத்தக்காளி கீரையின் சில நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
வலிப்பு:
நைஜீரியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வலிப்பு நோயை குணப்படுத்த மணத்தக்காளி கீரை பயனுள்ளதாக இருக்கும்.
கல்லீரல் பிரச்சனைகள்:
கல்லீரல் அழற்சி மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா உள்ளிட்ட கல்லீரல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமான ஹெபடைடிஸ் சிக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மணத்தக்காளி அற்புதமான கல்லீரல் பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
ஆஸ்துமா மற்றும் இருமல்:
மணத்தக்காளி பழத்தை ஆஸ்துமா சிகிச்சைக்காக உட்கொள்ளலாம்.
வலியைப் போக்கும்:
மணத்தக்காளியில் சோலனின் ஏ க்கு அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது மற்றும் வெளிப்புறமாகப் பயன்படுத்துவது இரண்டும் உதவும்.
நீரிழிவு நோய்:
பாரம்பரியமாக மணத்தக்காளி எப்போதும் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் இது ஆராய்ச்சி மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கிறது:
மணத்தக்காளி வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் உட்பட பல புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
தோல் வியாதிகள்:
தடிப்புத் தோல் அழற்சி, மூல நோய் மற்றும் ஆழமான தோல் நோய்த்தொற்றுகள் (அப்சஸ்ஸ்) எனப்படும் தோல் நிலைக்கு மணத்தக்காளியை நேரடியாக தோலில் தடவவும்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.