ஆரோக்கியம்

மழைக்கு இதமா ஈவ்னிங் டைம்ல கெட்டி சட்னி கூட இந்த சேமியா அடைய சாப்பிட்டு பாருங்க… அட அட அட பிரமாதமா இருக்கும்!!!

எப்பொழுதுமே ஒரே மாதிரியாக காலை உணவை செய்து கொடுத்தால் செய்பவருக்கும் போர் அடித்து விடும், அதனை சாப்பிடுபவருக்கும் அலுத்துப் போய்விடும். எனவே சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தால் சாப்பிடுபவர்கள் ஆசையோடு ஒரு கரண்டி கூடவே சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சேமியா அடை. இந்த சேமியா அடையை காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவோ நீங்கள் செய்து கொடுக்கலாம். இப்போது சேமியா அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சேமியா – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடுகு – 1/4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 6 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/4 கப்

வறுத்த வேர்க்கடலை – 10

இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை 

ஒரு கப் வறுத்த சேமியாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களிடம் வறுக்காத சேமியா இருந்தால் அதனை ட்ரை ரோஸ்ட் செய்து பயன்படுத்தவும். இதற்கு இடையில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். 

கடுகு வெடித்தவுடன் 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு ஒரு சிறிய கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: காதுகளுக்கு இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது சரியா…???

அடுத்து 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலையை ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். சேமியா ஊறியவுடன் தண்ணீரில் இருந்து அதனை வடிகட்டி வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். 

பிறகு நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இப்போது இதில் 6 டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு சேர்த்து கிளறவும். இப்போது கைகளில் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தோசை கல்லில் அடையாக தட்டி எடுக்க வேண்டியது தான். கைகளில் செய்வதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி அடையாக தட்டி எடுத்து பிறகு தோசை கல்லில் போட்டு எடுக்கலாம். அடையை வேக வைப்பதற்கு நீங்கள் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். இதற்கு கெட்டி தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

5 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

5 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

5 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

6 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

6 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

7 hours ago

This website uses cookies.