இளநரை பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கு பலர் மருதாணியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் ஹென்னா ப்ராடக்டுகள் அவ்வளவு திருப்தி தரும் வகையில் இருக்காது. ஏனெனில் இவற்றில் நம்முடைய தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்களும் இந்த பிரச்சனையை சந்தித்து வந்தால் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய தலைமுடிக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் வலிமையான மற்றும் கருமையான முடியை வளர செய்வதற்கு மருதாணி ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபி: 15 நாள் ஆனாலும் கெடாது… எல்லா வித காம்பினேஷனுக்கும் பொருந்தும்!!!
ரெசிபி 1:
உங்களுடைய தலைமுடியை மருதாணி வைத்து டை அடிப்பதற்கு முதலில் தயிர் போன்ற பதத்தில் தண்ணீர் ஊற்றி மருதாணி பொடியை கலந்து கொள்ளவும். இதனை ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை ஒரு கலரிங் பிரஷ் பயன்படுத்தி தலை முடியை பாகங்களாக பிரித்து பேஸ்ட்டை தடவவும். இப்பொழுது தலைமுடியில் ஷவர் கேப் அணிந்து 2 முதல் 3 மணி நேரங்களுக்கு காத்திருக்கவும். பின்னர் சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். நாளாக ஆக உங்களுடைய தலைமுடி கருமையாவதை உங்களால் பார்க்க முடியும்.
ரெசிபி 2:
மருதாணி பொடியுடன் காபி பொடியை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும். இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். பின்னர் தலைமுடியில் தடவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்தி தலை முடியை அலசவும்.
ரெசிபி 3:
இந்த மருதாணி சிகிச்சை செய்வதற்கு மருதாணி பொடியை தண்ணீரில் கலந்து அதில் 2 முதல் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை 2 முதல் 3 மணி நேரங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலை தலைமுடியில் தடவுங்கள். வழக்கம் போல சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி தலைமுடியை கருமையாக்கும்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.