ஆரோக்கியம்

கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபி: 15 நாள் ஆனாலும் கெடாது… எல்லா வித காம்பினேஷனுக்கும் பொருந்தும்!!!

இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்கு சென்றால் தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்பதால் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சமையல் என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக தான் இருக்கும். இது போன்ற நபர்களுக்காகவே இருக்கிறது சில ரெசிபிகள். இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு அருமையான தொட்டுக்கையாகவும், அதே நேரத்தில் பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். அப்படியும் இல்லாவிட்டால் வெறும் வெள்ளை சாதத்தில் பிரட்டி கூட சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம், 10 வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம், ட்ரை ரோஸ்ட் செய்தால் போதுமானது. வறுத்தபிறகு பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் சூடானதும் 10 முதல் 12 கத்திரிக்காயை காம்பை நீக்கிவிட்டு நடுவில் இரண்டு கோடு போட்டு சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காயின் தோல் நிறம் மாறியதும் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அதே கடாயில் ஏற்கனவே இருக்கும் எண்ணெயோடு மீண்டும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 10 பூண்டு பற்கள் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.

இதனோடு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள ஊறுகாய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு சிறிய எலுமிச்சம் அளவு புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அந்த புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் பிரிந்து ஊறுகாய் பதத்திற்கு வரும் வரை காத்திருக்கவும். அவ்வளவுதான் சுவையான நாவூரும் கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

5 minutes ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

28 minutes ago

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?

Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…

28 minutes ago

தொகுப்பாளினி திவ்யதர்சினிக்கு 2வது திருமணம்.. கல்லா பெட்டியை நிரப்பும் விஜய் டிவி!!

இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…

1 hour ago

சத்தியமா முடியாது- அஜித்துக்கு தங்கையாக நடிக்க நோ சொன்ன தொகுப்பாளினி? இவரா இப்படி?

டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…

1 hour ago

பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. விஜய் பவுன்சருக்கு சரமாரி அடி : வீடியோ வைரல்!

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…

2 hours ago

This website uses cookies.