ஆரோக்கியம்

கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபி: 15 நாள் ஆனாலும் கெடாது… எல்லா வித காம்பினேஷனுக்கும் பொருந்தும்!!!

இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்கு சென்றால் தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்பதால் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சமையல் என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக தான் இருக்கும். இது போன்ற நபர்களுக்காகவே இருக்கிறது சில ரெசிபிகள். இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு அருமையான தொட்டுக்கையாகவும், அதே நேரத்தில் பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். அப்படியும் இல்லாவிட்டால் வெறும் வெள்ளை சாதத்தில் பிரட்டி கூட சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம், 10 வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம், ட்ரை ரோஸ்ட் செய்தால் போதுமானது. வறுத்தபிறகு பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் சூடானதும் 10 முதல் 12 கத்திரிக்காயை காம்பை நீக்கிவிட்டு நடுவில் இரண்டு கோடு போட்டு சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காயின் தோல் நிறம் மாறியதும் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அதே கடாயில் ஏற்கனவே இருக்கும் எண்ணெயோடு மீண்டும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 10 பூண்டு பற்கள் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.

இதனோடு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள ஊறுகாய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு சிறிய எலுமிச்சம் அளவு புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அந்த புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் பிரிந்து ஊறுகாய் பதத்திற்கு வரும் வரை காத்திருக்கவும். அவ்வளவுதான் சுவையான நாவூரும் கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

12 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

13 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

14 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

14 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

15 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

15 hours ago

This website uses cookies.