ஒருவர் எப்போதுமே தமது நாளை பாசிட்டிவான எண்ணத்தோடு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு காலை எழுந்திருக்கும் பொழுதே சோம்பேறித்தனமாக, இன்று வேலைக்கு தான் செல்ல வேண்டுமா? அல்லது பள்ளிக்கு தான் செல்ல வேண்டுமா? என்பது போல இருக்கும். இது எப்போதாவது ஒருமுறை ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். எனினும், தினந்தோறும் இந்த மாதிரியான உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் நீங்கள் ஒரு சில தவறுகளை செய்து வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில கெட்ட பழக்கங்கள் காரணமாக உங்களுடைய காலைகள் சோம்பேறித்தனமாக மாறுகின்றது. அது என்ன மாதிரியான கெட்ட பழக்கங்கள் என்பதை பார்க்கலாம்.
காலை எழுந்ததும் முதலில் போனை பார்ப்பது
காலை எழுந்ததும் முதல் வேலையாக போனை பார்ப்பது பலரது பழக்கமாக உள்ளது. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இமெயில்கள், சோஷியல் மீடியா அல்லது நியூஸ் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுடைய படுக்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு உங்கள் போனை பார்க்கும் பழக்கத்தை இன்றோடு கைவிடுங்கள்.
தண்ணீர் குடிக்க மறப்பது
பலர் எழுந்ததுமே காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறனர். ஆனால் முதலில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது தான் நல்லது. உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஆரம்பித்து, ஆற்றல் அளவுகளை அதிகரிப்பதற்கு உங்களுடைய நாளை தண்ணீருடன் ஆரம்பியுங்கள்.
அலாரத்தை ஸ்னூசிங் செய்வது
பலர் அலாரத்தை வைத்து விட்டு அதனை ஸ்னூசிங்கிள் வைத்து விடுவார்கள். தொடர்ந்து அவ்வாறு செய்வது உங்களுக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு ஆகும். அதனை தவிர்ப்பதால் உங்கள் ஆற்றல் அளவுகள் குறையும். மேலும் கவனச்சிதறல்கள் ஏற்படும். ஆகவே உங்களுடைய காலை உணவு கட்டாயமாக ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
காலை நீட்சி பயிற்சிகள் காலையில் உடற்பயிற்சி அல்லது நீட்சி பயிற்சிகளை செய்வது உங்களை நேரடியாக பாதிக்காவிட்டாலும் உங்களுடைய நாளை ஆரம்பிப்பதற்கு இது ஒரு சிறந்த வழி. 10 முதல் 15 நிமிடங்கள் நீங்கள் நீட்சி பயிற்சியில் ஈடுபட்டாலே போதுமானது அல்லது தியானம், யோகா போன்றவற்றையும் நீங்கள் செய்யலாம். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.
மேலும் படிக்க: உங்க தலைமுடி பிரச்சினை எல்லாத்தையும் சால்வ் பண்ண கிரீன் டீ பவுடர்!!!
அவசர அவசரமாக காலை வேலைகளை செய்வது
காலையில் அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்வது உங்களுக்கு பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். முடிந்த அளவு முன்கூட்டியே எழுந்து பொறுமையாக சாவகாசமாக உங்களது காலையை அனுபவியுங்கள்.
உங்களுடைய இந்த சிறு சிறு கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை இனியும் செய்யாமல் உங்களுடைய காலையை புத்துணர்ச்சியாக மாற்றுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
This website uses cookies.