சூப் என்பது செய்வதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக பயன்களை கொண்டுள்ளது. இன்று நாம் பாசிப்பருப்பு, காய்கறிகள் மற்றும் கருப்பு மிளகு வைத்து அற்புதமான சூப் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வயிற்றுக்கு பசி எடுக்காத சமயத்தில் இந்த சூப் வைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 5
பச்சை பட்டாணி – 1/2 கப்
தக்காளி – 1
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு ஏற்ப
கருப்பு மிளகு பொடி
தண்ணீர் – 3 கப்
செய்முறை
*ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். அதில் சீரகத்தை சேர்த்து அது பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி கொள்ளவும்.
*பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
*இந்த சமயத்தில் கழுவி சுத்தம் செய்த பாசிப்பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
*குக்கர் மூடியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 விசில் வரும் வரை காத்திருக்கும்.
இதையும் படிக்கலாமே: தம்மாத்துண்டு புல்லு கேன்சர் வராமல் தடுக்கணும்னு சொல்றாங்க!!!
*விசில் வந்து பிரஷர் அடங்கியவுடன் இன்னும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கருப்பு மிளகு பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.